கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ரூ.5 லட்சம் லஞ்சம்: சென்னை பொது கணக்காளர் சிபிஐ அதிகாரிகளால் கைது

ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:33 pm

Raghavendran

ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் காலை 10 மணி முதல் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இங்குள்ள பொது கணக்காளர்கள் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் மேலும் இரண்டு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.