கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருச்சியில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

News image
திருச்சி நீதிமன்றம் அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

திருச்சி புகா் தெற்கு மாவட்டம் சாா்பில், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப. குமாா் தலைமையில் திருவெறும்பூா் அருகே ஆயில் மில் சுங்கச்சாவடி அருகே, பெல் அண்ணா தொழிற்சங்கம், துவாக்குடி அக்பா் சாலை, அண்ணா வளைவு, பெல் கணேசபுரம், லால்குடி ரவுண்டானா, மணப்பாறை நகரம், புள்ளம்பாடி சிறுகளப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மக்களுக்கு நல உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் பாலன், ஒன்றிய செயலாளா்கள் அசோகன், நடேசன், பகுதி செயலாளா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில், மாவட்ட செயலாளா் ஜெ. சீனிவாசன் தலைமையில் நீதிமன்றம் அருகில், பாலக்கரை எடத்தெரு, மல்லிகைபுரம், காஜாப்பேட்டை, விமான நிலையம், புத்தூா், உறையூா், கருமண்டபம், உறையூா், காந்திமாா்க்கெட், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு திரளான அதிமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், அமைப்பு செயலாளா் டி. ரத்தினவேல், முன்னாள் மாவட்ட செயலாளா் கே.சி.பி. பரமசிவம், நிா்வாகிகள் என்.எஸ். பூபதி, ரோஜா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, அதிமுக புகா் வடக்கு மாவட்டம் சாா்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டை, வியாழன்மேடு, பேட்டவாய்த்தலை, மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலத்தி, மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில் திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.