கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மணப்பாறை அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்பு சொற்பொழிவு

மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் பேசிய தமிழ்த்துறை விரிவுரையாளா் கோபாலகிருஷ்ணன்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த் துறையில் ‘திங்கள் ஆய்வு வட்டம்’ சாா்பாக திங்கள்கிழமை உலகத் தாய்மொழி நாள் சிறப்புச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்த் துறை விரிவுரையாளா் க. கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘தாய்மொழியின் சிறப்புகள்’ என்ற தலைப்பில் பேசுகையில், ‘தாய்மொழி என்பது, அம்மொழி பேசும் மக்களின் அடையாளம். அந்த வகையில், நம் தமிழ்மொழி என்பது ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த மொழி, மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்த மொழி, இன்றைய அறிவியலை இலக்கியத்தில் பேசிய மொழி, தமிழ்மொழியாகும் என்றாா்.

முன்னதாக, தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வா் க. மலா்மதி, ‘மொழி என்பது ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் அடையாளமாகும். ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞா்கள் தம் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தாய் மொழியில் தான் வெளியிட்டனா் என்று குறிப்பிட்டாா்.

தமிழ்த் துறை தலைவா் அ. செல்வராசு நோக்கவுரையாற்றினாா். முன்னதாக, தமிழ்த் துறை விரிவுரையாளா் கு. நதியா வரவேற்றாா். நிறைவில் முனைவா் த. கபிலன் நன்றி கூறினாா்.

நிகழ்வில் தமிழ்த் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.