சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலை என்பது என்ன? அர்த்தம் சொல்கிறார் திருப்பூர் கல்லூரி மாணவி

குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் உதவ எத்தனையோ பெண்கள் சவாலான பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி செய்யும் பணி அதற்கெல்லாம் ஒரு படி மேல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

ENS


திருப்பூர்: குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் உதவ எத்தனையோ பெண்கள் சவாலான பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி செய்யும் பணி அதற்கெல்லாம் ஒரு படி மேல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

திருப்பூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் சண்முகப்பிரியா (20) என்ற பெண் தனது தந்தைக்கு உதவியாக இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார்.

தந்தை சின்னசாமி ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தும் இறைச்சிக் கடையில் இறைச்சியைக் நறுக்கிக் கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

பல ஆண்டுகாலமாக எனது தந்தை இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். எனது சகோதரரும் இதே வேலையைத்தான் செய்கிறார். எனது தந்தைக்கு உதவி செய்ய விரும்பி இந்த பணியை கடந்த 2 ஆண்டுகளாக செய்து வருகிறேன் என்கிறார் சண்முகபிரியா.

ஆரம்பத்தில் இந்த வேலை சற்று சிரமமாக இருந்தாலும், தற்போது லாவகமாகவே வேலை செய்கிறார். எனது தந்தைக்கு உதவி செய்வதால் சந்தோஷம் கிடைக்கிறது. எனது வேலையால் எனது கல்வி செலவுக்கும் பணம் கிடைக்கிறது என்கிறார்.

என் உறவினர்கள் பலரும் பெண்ணை படிக்க வைக்க வேண்டாம் என்கிறார்கள். ஆனால் என் தந்தை எனது படிப்புக்கு உறுதுணையாக இருக்கிறார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார் சண்முகபிரியா.

எனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் நான் இறைச்சிக் கடையில் பணியாற்றுவது தெரியும். அதனால் வெட்கப்பட என்ன இருக்கிறது? பலரும் என்னை பாராட்டவே செய்கிறார்கள். நல்ல வேலையைத்தான் செய்கிறாய். எந்த பணியுமே தரம் தாழ்ந்ததோ செய்யக் கூடாததோ இல்லை. மனசாட்சிக்கு உட்பட்டு எந்த வேலையையும் செய்யலாம் என்று வேலை என்பதற்கு ஒரு அர்த்தத்தை அளிக்கிறார் சண்முகப்பிரியா.

உங்கள் மகளை இப்படி இறைச்சிக் கடையில் வேலை செய்ய விடலாமா என்று பலரும் தந்தை சின்னசாமியை கேட்கிறார்கள். அதற்கு அவர் தரும் பதில், நாங்கள் பல ஆண்டுகாலமாக இந்த பணியைத்தான் செய்கிறோம். பிறகு என் மகளை இந்த வேலை செய்யக் கூடாது என்று எப்படி சொல்வது, அவள் நல்ல வேலையைத்தான் செய்கிறார். அது அவளது படிப்புக்கும் உதவுகிறது என்று தெளிந்த நீரோடைப்போல பேசுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.