மதுரை: பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா, மாநில பதிவுத் துறையின் உதவியாளராக இம்மாத இறுதியில் பணியில் சேர உள்ளார்.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசிதழ் பதிவுறா அலுவலராக ஒரு திருநங்கை பணியில் சேர்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த பெருமையையும் ஸ்வப்னா பெறுகிறார்.
இதுமட்டுமல்ல, மாநில அரசின் 3 உத்தரவுகளுக்கு எதிராக ஸ்வப்னா மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக திருநங்கைகளுக்கு பல்வேறு பலன்களும் கிடைத்துள்ளன.
எக்ஸ்பிரஸ் குழுவிடம் பேசிய 27 வயதாகும் ஸ்வப்னா, தான் ஒரு திருநங்கை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும், தான் பெண்ணாக மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
அவரே தொடர்கிறார், "எனது அனைத்துப் போராட்டங்களுக்கும் பெற்றோர்தான் மிகப்பெரிய காரணம். எந்த நிபந்தனையும் இல்லாமல் தூய்மையான அன்போடு என்னை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்".
எனது கல்விதான் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது, 2013ம் ஆண்டு திருநங்கை என்ற காரணத்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் போன போது எனது சட்டப் போராட்டம் தொடங்கியது. சென்னையில் போராட்டம் நடத்திய நான், மதுரை கிளையில் இதற்காக வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கில் தன்னலம் கருதாத இரண்டு வழக்குரைஞர்கள் கட்டணம் இல்லாமல் வழக்கில் வாதாடி உதவி செய்தனர்.
பெண்கள் என்ற பிரிவின் கீழ் திருநங்கைகளை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் ஸ்வப்னாவின் சட்டப் போராட்டத்துக்கு பலன் கிடைத்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மற்றும் குரூப் 2ஏ பிரிவிலும் வெற்றி பெற்றார் ஸ்வப்னா.
ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே என் லட்சியம். எனது லட்சியத்தை அடைய நான் கடுமையாக போராடுவேன். டிஎன்பிஎஸ்சியில் செய்தது போலவே இதிலும் சாதிப்பேன் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


