மதுரை: ஏப்ரல் 1ம் தேதி கணவர் விவேக்குடன் துபை செல்லவிருந்த திவ்யா காட்டுத் தீயில் சிக்கி பலியான சம்பவம் அவரது உறவினர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
பேராசிரியராக பணியாற்றி வந்த திவ்யாவுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்தது.
காட்டுத் தீயில் சிக்கி அவரது காதல் கணவர் விவேக் சம்பவ இடத்தில் பலியாக, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்த போது கூட தவமணி கலங்கவில்லை. ஆனால் 90 சதவீத தீக்காயத்துடன் 25 வயதாகும் மகள் திவ்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கலங்கிவிட்டார். தனது மகள் படும் கஷ்டத்தைப் பார்த்து தாங்க முடியாமல், அவருக்கு அளிக்கப்பட்ட உயிர் காக்கும் கருவிகளையே அகற்றிவிடுமாறு கதறியிருக்கிறார் தவமணி.
ஒரே பகுதியைச் சேர்ந்த திவ்யா - விவேக் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இவர்களுக்கு இடையே காதல் மலர, முதலில் எதிர்த்த பெற்றோர் பிறகு சம்மதித்து காதலர்களை தம்பதிகளாக்கினர். விவேக் துபையில் பணியாற்றி வந்தார். இவர்களது காதல் திருமணம் ஒரு சில மாதங்கள் கூட நீடிக்காமல் இப்படி காட்டுத் தீயில் பொசுங்கிப் போனது பெற்றோருக்கு மிகப்பெரிய பேரிடியாக உள்ளது.
"மரணத்தின் இறுதித் தருவாயில் உயிருக்குப் போராடும் எனது மகள் படும் கஷ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை. அவளை இறக்க விடுவதே சரி என்று தோன்றியது. அவளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளை அகற்றுமாறு மருத்துவர்களிடம் கூறினேன்" என்றார் தாய் தவமணி கண்ணீருடன்.
எம்.எஸ்சி., எம்.பில்., படித்து முடித்து தான் பயின்றித கல்லூரியிலேயே பேராசிரியராக பணியாற்றிய திவ்யாவின் உடல் மதுரை மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி திவ்யா, தனது கணவர் விவேக்குடன் துபை செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கான விசா, விமான டிக்கெட்டுகள் எல்லாம் தயாராக உள்ளன. ஆனால் விதி எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டது என்கிறார்கள் உறவினர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


