மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திங்களன்று கரையை கடக்கும் புயல் சின்னத்தால் 2 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி திங்கட்கிழமை ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும்.

News image
Updated On :15 டிசம்பர் 2018, 10:49 am


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி திங்கட்கிழமை ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும்.

இதன் காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் தரைக் காற்று மணிக்கு 45- 55 கி.மீ. வேகத்தில் வீசும். சமயத்தில் 65 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும்.

தெற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்காக நகர்ந்து மச்சிலிப்பட்டினத்துக்கு 890 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) புயலாக மாறி, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் (ஞாயிறு, திங்கள்) தீவிரப் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே டிசம்பர் 17ம்  தேதி பிற்பகலில் கரையை கடக்கும். இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மிகக் கன மழை பெய்யும். தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிசம்பர் 16ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 17ம் தேதி காலை முதல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மெல்ல அதிகரித்து மணிக்கு 80- 90 கி.மீ. வேகத்திலும், இது மேலும் அதிகரித்து மணிக்கு 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.