டி.டி.வி. தினகரனை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு!
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பி.எ.ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் , 'அந்நியச் செலவாணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளவரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கபட்டிருப்பது செல்லாது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளில் கிரிமினல் வழக்குக்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட தடை என்று கூறப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அவ்வாறு நடந்து கொள்வதற்கு பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை. எனவே குறிப்பிட்ட அந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்து, அவை அரசியல் சட்ட விரோதமென்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவானது இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ் மற்றும் டீகா ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் உரிய அதிகாரிகளை அணுகி நிவாரணம் பெறலாம்' என்று தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...