ஆ) தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் முதல்வீடாம், பழனிமலையில் மூலிகை மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மெய்யறிவு வாய்ந்த சித்தர்கள் பலர் மருத்துவ குணம் படைத்த இம்மூலிகை மரங்களை சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வகை மருத்துவத் தன்மை வாய்ந்த நெல்லி, அசோகு, வில்வம், விள, மாதுளை, சந்தனம், கடுக்காய், தான்றி, பூவரசு, நீர்மருது, மகிழம், இலுப்பை உள்ளிட்ட 50 வகை மரங்களை தலா 200 எண்ணிக்கையில் மொத்தம் 10,000 மரக்கன்றுகளை நட்டு, பெரும் பூங்கா ஒன்று முதல்வர் ஆணையின்படி ரூ.3000 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.