மேற்குத் தொடர்ச்சி மலையில் அரிய வகை மூலிகைச் செடிகளும், மரங்களும் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, மான் போன்ற விலங்குகளும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை வனங்களைப் பாதுகாப்பது, மரங்களை வெட்டுவோரைக் கைது செய்வது, விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்து அவர்களைக் கைது செய்வது, விலங்கினங்களுக்கு உணவுக்காகத் தேவைப்படும் செடிகளை வளர்ப்பது, தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது போன்ற பணிகளை வனச் சரகர் மேற்பார்வையில் வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.