டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே வளர்ச்சி பணிகளை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் தடையுத்தரவு மனுவுக்கு எதிராக கிராம மக்கள் ஆட்சேபனை

விருதுநகர் அருகே பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக கூறி தடையுத்தரவு பெற தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கிராம மக்கள்  நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆட்சேபனை

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:48 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக கூறி தடையுத்தரவு பெற தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கிராம மக்கள்  நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆட்சேபனை தெரிவித்தனர். 

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வச்சக்காரப்பட்டி கிராமம். இக்கிராம ஊராட்சியில் உள்ள தடங்கம், சண்முகசுந்தரபுரம், பூசாரிபட்டி, வச்சக்காரப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு ஆகிய பகுதிகளில் ரூ.46.50 லட்சத்தில் 4 சமுதாயக் கூடம் அமைத்தல், ரூ.15 லட்சத்தில் குடிநீர் குழாய் பதித்தல், தலா ரூ.9 லட்சத்தில் 4 சிமெண்ட் சாலை அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் கிராம தன்னிறைவு திட்டம் மூலம் ரூ.1.42 கோடியில் நடந்து வருகிறது. தற்போது, 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.

இந்நிலையில், இதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்விநாயகம் என்பவர் பொதுமக்களுக்கு இடையூராக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி தடையுத்தரவு பெறுவதற்காக பொதுமக்கள் சார்பாக சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாராம். இந்த மனு மீதான விசாரணை விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக ஊராட்சி தலைவர் ஆனந்தராமன் தலைமையில் 200-பேர் நீதிமன்றத்திற்கு வந்தனர். பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.