இது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா கூறுகையில், நடவு முறையில் துவரை சாகுபடி என்பது பாலித்தீன் பையில் 25,30 நாள்கள் வரையில் வளர்த்து அதையடுத்து, விளைநிலங்களில் 2 அடி இடவெளியிட்டு நடப்படுகிறது. இந்த முறையில் செய்வதால் 120 நாள்களில் அதிகமான சாகுபடி செய்ய முடியும். இதற்காக தேசிய வேளாண்மை திட்டம் சார்பில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பயிர் வளப்பதற்கான பாலித்தீன் பை, ஹைட்ரோஜெல், நுண்ணூட்ட உரம், உயிர் உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், நடவு முறை துவரையில் வறட்சி தவிர்க்கப்படுகிறது. அதோடு பயிர் எண்ணிக்கையும் பராமரிக்கப்படுகிறது. இதனால், சாதாரண முறையில் ஏக்கருக்கு 450 கிலோ வரையிலும் கிடைக்கும் நிலையில், நடவு முறையில் 800 கிலோ வரையில் மகசூல் பெற முடியும் என்றார்.