தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை: பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தின் போது உடன்பாடு!

இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 9:19 am

இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.

அதிகமான அணு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில், மேலும் அணு உலைகளை அமைப்பதற்கு இந்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதன்படி திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ஏற்கெனவே உள்ள அணு உலைகளுடன் மேலும் இரு அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23, 24 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

இதற்கு முன்னோட்டமாக, ரஷ்ய அணுசக்தி துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி நிகோலாய் ஸ்பாஷ்கி கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியா வந்து, இந்திய அணுச்சக்தி துறை செயலர் சேகர் பாஸுவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கூடங்குளத்தில் இயங்கி வரும் முதலாவது அணு உலையை முறைப்படி பெற்றுக் கொள்வது, இரண்டாவது அலகில் குறைந்தப்பட்ச மின் உற்பத்தி, 3,4-வது அணு உலை கட்டுமானத்தை தொடங்குவது, 5, 6-வது அணு உலைகளுக்கான ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

புதிதாக அமைக்கப்படும் 5, 6-வது அணு உலைகள், ஏற்கெனவே உள்ள வி.வி.இ.ஆர். தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அணு உலை அமைப்பத்தில் மத்திய அரசு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இடப்பற்றாக்குறை, பணியாளர் குடியிருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில் மேலும் அணு உலைகளை அமைப்பது என அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் புதிதாக அணு உலை அமையவிருக்கும் இடங்களில் உள்ளூர் மக்களின் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்துவது தவிர்க்கப்படும். உள்கட்டமைப்பு செலவும் குறையும் என அரசு கருதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.