தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கூடங்குளம்: கேரளாவுக்கு கூடுதல் மின்சாரம் வழங்குவது குறித்து மின்துறையே தீர்மானிக்கும்

கூடங்குளத்திலிருந்து கேரளாவுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்குவது குறித்து மின்துறையே தீர்மானிக்கும் என பிரமதர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 1:23 pm

கூடங்குளத்திலிருந்து கேரளாவுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்குவது குறித்து மின்துறையே தீர்மானிக்கும் என பிரமதர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, கூடங்குளம் அணு உலையிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் கேரளாவுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்கப்படுமா என உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மின் பகிர்வு குறித்து மத்திய மின் துறையே ஒரு விதிமுறை வகுத்துள்ளது. அதன்படி உற்பத்தி செய்யும் மாநிலத்துக்கு 50 சதமும், அருகில் உள்ள மாநிலத்துக்கு 35 சதமும், மத்தியத் தொகுப்புக்கு 15 சதமும் வழங்கப்படும்.

இதில் அண்டை மாநிலத்துக்கான மின்சாரத்தை அதிகரிப்பது குறித்து மத்திய மின்சாரத் துறை தான் தீர்மானிக்கும். எனவே இக்கோரிக்கை குறித்து உறுப்பினர் மின்துறை அணுகலாம் என்றார்.

மேலும், தற்போது பராமரிப்பில் உள்ள கூடங்குளம் முதலாவது அணு உலை வருகிற ஜனவரி மாதம் உற்பத்தியை தொடங்கும். இரண்டாவது அணு உலை அடுத்த ஆண்டு மத்தியில் உற்பத்தியை தொடங்கும்.

இந்த இரு உலைகளும் செயல்பட தொடங்கினால் தமிழக மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும்.

கூடங்குளம் அணு உலை செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்றார் ஜித்தேந்திர சிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.