ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நிவாரணப் பொருள்கள் மீது முதல்வர் படம்: விஷமப் பிரசாம் என அதிமுக விளக்கம்

தனியாரால் விநியோகிக்கப்படும் நிவாரணப் பொருள்களில் முதல்வர் படம் ஒட்டுவதற்கு கட்டாயப்படுத்துவதாக கூறுவதில் உண்மையில்லை என அதிமுக விளக்கம்

News image
Updated On :6 டிசம்பர் 2015, 10:20 am

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, தனியாரால் விநியோகிக்கப்படும் நிவாரணப் பொருள்களில் முதல்வர் படம் ஒட்டுவதற்கு கட்டாயப்படுத்துவதாக கூறுவதில் உண்மையில்லை என அதிமுக விளக்கம் அளித்துள்ளது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில இடங்களில் பொருள்கள் விநியோகிக்கப்படும் முன்னர், அதில் முதல்வர் படத்தை ஒட்டுவதற்கு அதிமுகவினர் கட்டாயப்படுத்தப்படுவதற்காக புகார்கள் எழுந்தது.

இதுகுறித்த கருத்துகள், எதிர் கருத்துகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதனால் நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிமுக நிர்வாகி ஒருவர், முற்றிலும் தவறான தகவல் இது என்றார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இதேபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதற்கு நேரமே இல்லை.

மேலும், திருவள்ளூர்- திருத்தணி சாலையில் நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை அதிமுகவினர் மறித்ததாக வந்த செய்தியிலும் எவ்வித உண்மையும் இல்லை. நேர்மையற்றவர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக செய்யும் விஷமப் பிரசாரமே இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.