ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சென்னை வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு

சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் இதுவரை 2400 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

News image
Updated On :3 டிசம்பர் 2015, 10:52 am

சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் இதுவரை 2400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் 600 பேர் சென்னை வருகினறனர்.

சென்னை மழை வெள்ளம் குறித்த, நெருக்கடி கால மேலாண்மை குழுக் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெகரிஷி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு, உணவு, ரயில்வே, வேளாண்மை, சுகாதாரம், தொலைதொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள்,  தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், வானிலை மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 குழுக்கள் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதியில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இக்கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பேரிடர் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்.) தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.

மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு ராணுவ குழுக்களை அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒரு ராணுவ குழுவில் 75 வீரர்கள் இடம் பெறுவர்.

என்.டி.ஆர்.எப். சார்பில் இதுவரை 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது பணியில் ஈடுபட்டுள்ள 600 பேர் தவிர மேலும், 600 பேரை சென்னைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.