டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முன்பதிவு ரத்து: சிறப்பு மையங்களை அமைத்து ரயில்வே உத்தரவு

ரயில்வே முன்பதிவு நிலையங்களில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு மையங்களை அமைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:41 am

PTI

ரயில்வே முன்பதிவு நிலையங்களில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு மையங்களை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்குரிய புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் ரயில் நிலைய முன் பதிவு மையங்களில், டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு கவுன்டர்களை அமைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை விநியோகிக்கும் ஒரு கவுண்டர் சிறப்பு கவுன்டராக மாற்றம் செய்யப்படும். இந்த சிறப்பு கவுன்டர்கள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்யும் கவுன்டர்கள் இல்லாத இடங்களில், ஒரு முன்பதிவு கவுன்டர்,  ரத்து செய்வதற்கான சிறப்பு கவுன்டராக குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் மாற்றம் செய்யப்படும்.

எனினும், இந்த சிறப்பு கவுன்டர்களில் 24 மணி நேரத்துக்குள் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே ரத்து செய்ய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.