நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆடி அமாவாசை: வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் புனித நீராடல் முன்னோர்களுக்கு நீர் சடங்கு

நாகை மாவட்டம்,வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை புனித நீராடிய மக்கள்,தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்ப்பணம்) செய்து வழிபட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:26 am

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை புனித நீராடிய மக்கள்,தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்ப்பணம்) செய்து வழிபட்டனர்.

இங்கு,அதிகாலை தொடங்கி நீராடல் நடைபெற்றது.கோடியக்கரை கடல் பகுதி முழுக்குத்துறையில் நீராடிய மக்கள் தங்களது முன்னோர்கள் நினைóவாக தர்பபணம் கொடுத்தனர்.பின்னர் அவர்கள்,அங்குள்ள சித்தர் பீடம்,ராமர் பாதம் ஆகிய இடங்களில் வழிபட்டனர்.

இதேபோல,வேதாரண்யம் சன்னதிக் கடல் பகுதியிலும் நீராடினர்.தொடர்ந்து, வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிக்கர்ணிகை எனும் புனித தீர்த்தக்குளத்தில் நீராடி,இறைவனை வழிபட்டனர்.

பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே பந்தல்அமைக்கப்பட்டு, அன்னதானம்,நீர்மோர் போன்றவை அளிக்கப்பட்டது. அரசு போக்க்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.