ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மாணவர்கள் படிப்பில் வேகத்தை காட்ட வேண்டும் : சாலையில் காட்டக்கூடாது

  மாணவர்கள் படிப்பில் வேகத்தை காட்ட வேண்டுமே தவிர, சாலையில் காட்டக்கூடாது என்று ஆம்பூர் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் கணேசன் கூறினார்.

Updated On :8 ஆகஸ்ட் 2014, 11:10 am

  மாணவர்கள் படிப்பில் வேகத்தை காட்ட வேண்டுமே தவிர, சாலையில் காட்டக்கூடாது என்று ஆம்பூர் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் கணேசன் கூறினார்.

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிமை நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது, 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.  அவர்கள் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வது, செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை விபத்து ஏற்படுகிறது.  ஆகவே சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படுமென அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜமன்னன் தலைமை வகித்தார்.  நிர்வாக அலுவலர் ஹிரானி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், வடிவேலு குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.   போக்குவரத்து விதிகள் அடங்கிய கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.