நமது பாரம்பரியத்தை இளைய தலைமுறையினரும் அறிந்து, அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 ஆம் தேதி வரை உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் யுனெஸ்கொ இதுவரை 30 தலைப்புகளில் பாரம்பரியச் சின்னங்களை அறிவித்துள்ளது. இவற்றில் 5 தமிழ்நாட்டில் உள்ளன. தஞ்சை பெரியகோயில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதீóஸ்வரர் கோயில், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், உதகை நீராவி ரயில் என்ஜின், மாமல்லபுரம் சிற்பங்கள் ஆகியவை யுனெஸ்கொவால் அங்கீகரிக்கப்பட்டவை.