இப் பள்ளியில் மெட்டாலா, கப்பலூத்து, கணவாய்ப்பட்டி, புளியம்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, நாரைக்கிணறு, ராசாப்பாளையம், செல்லிப்பாளையம் போன்ற கிராமப்புறப் பகுதிகளின் மலைவாழ் மக்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர் போன்றோரின் குழந்தைகள் அதிகம் பயின்று பயன்பெற்று வருகின்றனர். கப்பலூத்து, கணவாய்ப்பட்டி போன்ற பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து போதிய பேருந்து வசதி இல்லாததால் நடந்து வந்து பயிலும் நிலையும் மாணவர்களுக்கு உண்டு. 2011-12-ம் கல்வியாண்டில் 119 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியதில் 94 பேர் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்விக்குச் செல்கின்றனர்.