கர்நாடக வனத்துறை அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிவிக்கையில், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் முக்கியப் பகுதியாக விளங்கக்கூடிய பந்திப்பூர் புலிகள் காப்பகப் பகுதியில் வனவிலங்குகளுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இப்போது இரவு நேர போக்குவரத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை விதிக்கப்பட்டுள்ள தடையை மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை நீட்டிப்பது எனவும், இதுதொடர்பாக ஆட்சேபனைகள் ஏதாவது இருந்தால் அவற்றை நவம்பர் மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டுமெனவும், ஆட்சேபனைகள் ஏதுமில்லாத பட்சத்தில் இந்த நேர மாறுதல் டிசம்பர் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.