திருநெல்வேலி மாநகரைச் சுற்றி அதிகமான கிராமங்கள் உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் மட்டும் 134 நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை கிராமப்புறங்களுக்கே இயக்கப்படுகின்றன. ஆனால் அண்மைக்காலமாக நகர பஸ்கள் கிராமப்புறங்களுக்கு முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, வல்லநாடு, தாழையூத்து, மானூர்,ஆலங்குளம்,பேட்டை,கருங்குளம்,சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் பஸ்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடக்கம்.