கரிசல்குளத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவருக்குச் சொந்தமான அந்த குளம், நில உச்சவரம்பு சட்டத்தில் பறிபோகாமல் இருக்க அவர் அந்த குளம் இருக்கும் நிலத்தை சிலருக்கு விற்பனை செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. நிலத்தை வாங்கியவர்கள்தான் குளம் இருக்கும் நிலம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடினர். பின்னர், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலத்திற்கு அரசு விதிமுறைப்படியான இழப்பீட்டைத் தருவதாகக் கூறி எழுத்து மூலம் ஒப்புதல் பெற்று குளத்தை சீரமைத்தனர். அதன்பின்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குளத்தை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால், பாழ்பட்டு கிடந்த விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன.