வியாபாரியாகும் பணியாளர்கள்: அரிசி கடத்துவோர் எல்லையோர சோதனைச் சாவடி வழியாக பஸ்களிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் கேரளத்திற்கு அரிசி கடத்திச் செல்வதற்கு தினக்கூலி மற்றும், நடை எண்ணிக்கை கணக்கில் பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகவும், பெண்கள் அதிக அளவில் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நியாய விலைக் கடை அரிசியை கொள்முதல் செய்து, கடத்தி விற்பதற்கு குறைந்த அளவு முதலீடே போதுமானது என்பதாலும், அதிக லாபம் கிடைப்பதாலும், சில மாதங்கள் வரை அரிசிக் கடத்தல் பணியில் ஈடுபட்டவர்கள்,பின்னர் வியாபாரிகளாக மாறிவிடுகின்றனராம்.