கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கிடைக்கக் கூடியது மத்தி மீன். கேரளத்தில் சீசன் களை கட்டியுள்ளதால், காரைக்காலில் பிடிக்கப்படும் மீன்கள் அங்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால், கருவாடாக்கி கோழிப் பண்ணைகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். மத்தி மீன் 50 கிலோ ரூ. 300 முதல் 400 வரை விற்பனை செய்ய முடியும். கருவாடாக்குவதால் 50 கிலோ மீன் 25 கிலோவுக்கும் குறைவான எடைக்கு வந்துவிடுகிறது. ஒரு கிலோ கருவாடு ரூ. 5-க்கு விலை போகிறது. லாபம் வெகுவாகக் குறைந்தே கிடைத்தாலும், மத்தியை மட்டுமே நம்பி தொழில் செய்யும் போது எங்களுக்கு வேறு வழியில்லை என்றார் அவர்.