வரும் கல்வியாண்டில் முதல் மற்றும் 6}ம் வகுப்பில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநிலப் பாட திட்டம், மெட்ரிகுலேஷன், ஓரியண்டல், ஆங்கிலோ}இந்தியன் என நான்கு வகை பாட திட்டங்களையும் ஒன்றிணைத்து பொதுக் கல்வி வாரியம், பொது பாடதிட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கட்டண வசூல் தொடர்பான தனியார் பள்ளிகளின் முழுவிவரத்தைத் திரட்ட படிவத்தைத் தயாரித்துள்ளது. இப்போது மாவட்ட வாரியாக தனியார் மெட்ரிக் பள்ளிகளின் முழு விவரமும் திரட்டப்பட்டு வருகிறது.