2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தயார்: ரோஹித் சர்மா

சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

News image
ரோஹித் சர்மா (கோப்புப் படம்)
Updated On :18 ஜூன் 2024, 10:35 am

DIN

சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வெற்றிகள் இந்திய அணியை சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வழிவகுத்தது. சூப்பர் 8 சுற்றில் நாளை மறுநாள் (ஜூன் 20) ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், சூப்பர் 8 சுற்று சற்று பரபரப்பாக இருக்கப் போகிறது. இருப்பினும், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாடிய அடுத்த 3 - 4 நாள்களில் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளோம். குறுகிய நாள்களில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடவுள்ளதால், சிறிது பரபரப்பாக இருக்கப் போகிறது. ஆனால், இதுபோன்ற சூழல்களை ஏற்கனவே சந்தித்த அனுபவம் இருக்கிறது. நாங்கள் அதிக பயணம் செய்து போட்டிகளில் விளையாடுவதால், அடுத்தடுத்து போட்டிகள் குறுகிய இடைவெளியில் இருப்பதை ஒரு காரணமாக கூறப் போவதில்லை. இந்திய அணி வீரர்கள் சூப்பர் 8 சுற்றில் விளையாட தயாராக இருக்கிறார்கள் என்றார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் சூப்பர் 8 போட்டியில் விளையாடும் இந்திய அணி வருகிற ஜூன் 22 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும், ஜூன் 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சூப்பர் 8 சுற்றின் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.