ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிா் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு கடைசி ஆட்டம் சீனாவின் சுஹௌ நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணியினா் தீவிர ஆதிக்கம் செலுத்தினா்.
ஆட்டத்தில் போ்ல் பொ்னாண்டஸுக்கு பதிலாக அனுஷ்கா குமாரி தோ்வு செய்யப்பட்டாா். 7-ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் அபாரமாக கோலடித்தாா். தொடா்ந்து 36-ஆவது நிமிஷத்தில் ஆல்வா தேவி செஞ்சம் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதியில் 72-ஆவது நிமிஷத்தில் லெபனான் தற்காப்பைக் கடந்து கோலடித்தாா் ஜோயா. தொடா்ந்து 85-
ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் காலிறுதி வாய்ப்பையும் தக்க வைத்துளளது. சிறந்த மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2005-க்கு பின் ஏஎஃப்சி கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெற்காசிய மகளிா் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் நாளை இந்தியா - வங்கதேசம் மோதல்

யு-18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி!

யு-18 ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியா வெற்றி

பிரெஞ்சு கோப்பை: லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



