போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆன்டனெலிக்கு ‘ஹாட்ரிக்’

News image
Updated On :5 மே 2026, 5:30 am IST

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 4-ஆவது ரேஸôன மியாமி கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மெர்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றார்.

ஏற்கெனவே, சீன கிராண்ட் ப்ரீ, ஜப்பான் கிராண்ட் ப்ரீ ஆகியவற்றிலும் வென்ற ஆன்டனெலிக்கு இது தொடர்ந்து 3}ஆவது வெற்றியாகும் (ஹாட்ரிக்).

மியாமி கிராண்ட் ப்ரீயில் அவர் முதல் வீரராக வர, நடப்பு சாம்பியாக இருக்கும் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் 2}ஆம் இடம் பெற்றார். அவரின் சக மெக்லாரென் டிரைவரும், ஆஸ்திரேலியருமான ஆஸ்கர் பியஸ்ட்ரி 3}ஆம் இடம் பிடித்தார்.

மழையால் பாதிக்கப்படும் அச்சம் இருந்ததால், பந்தயம் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. பந்தயம் தொடங்கும் முன்பாகவும் கன மழை பெய்திருந்தது. மீண்டும் மழை வருவதற்கான அறிகுறி இருந்ததால், முதல் 25 லாப்களில் வீரர்கள் துரிதமாக செயல்பட்டனர்.

முன்னிலையுடன் (போல் பொசிஷன்) பந்தயத்தை தொடங்கிய ஆன்டனெலி, 3}ஆவது லாப்பில் பின்னடைவை சந்தித்தார். எனினும் 5}ஆவது லாப்பில் மீண்டும் முன்னிலை பெற்றார். பின்னர் லாண்டோ நோரிஸ், சார்லஸ் லெக்லெர்க், ஆன்டனெலி ஆகியோர் முன்னிலையும், பின்னிலையுமாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்தனர்.

பிறகு ஒரு கட்டத்தில் முன்னிலை பெற்ற ஆன்டனெலி, இறுதிவரை அதைத் தக்கவைத்து வெற்றி பெற்றார்.

போட்டியின் அடுத்த பந்தயமான கனடியன் கிராண்ட் ப்ரீ, வரும் 24}ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.