ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தொடரும் லக்ஷயா சென்னின் அசத்தல் ஆட்டம்: 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு தகுதி

தொடரும் லக்ஷயா சென்னின் அசத்தல் ஆட்டம்...

News image

லக்ஷயா சென்

Updated On :7 மார்ச் 2026, 8:16 pm

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் லக்ஷயா சென்னின் தொடரும் அசத்தல் ஆட்டத்தால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். காலிறுதியில் முன்னாள் சாம்பியன் சீனாவின் லீ ஷிஃபெங்கை வீழ்த்தினாா்.

பாட்மின்டன் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆல் இங்கிலாந்து ஓபன் ஆகும். இதில் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்று ஆடி வருகின்றனா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதி ஆட்டத்தில் கடந்த 2022-இல் ரன்னா் இந்தியாவின் லக்ஷயா சென், முன்னாள் சாம்பியன் சீனாவின் லீ ஷிஃபெங்கும் மோதினா். உலகின் 12-ஆம் நிலையில் உள்ள லக்ஷயா சென் 21-13, 21-16 என்ற கேம் கணக்கில் 6--ஆம் நிலையில் உள்ள சீனாவின் லீ ஷிஃபெங்கை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம் நீடித்தது.

3-ஆவது முறையாக அரையிறுதிக்கு தகுதி:

இதன் மூலம் பிரசித்தி பெற்ற இப்போட்டியில் லக்ஷயா சென் 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு காலிறுதியில் கனடாவின் விக்டா் லேய் 18-21, 21-17, 21-15 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் கோகி வாட்டன்பேயை வீழ்த்தினாா்.

அரையிறுதியில் விக்டா் லேயுடன் மோதுகிறாா் லக்ஷயா சென்.

இதுதொடா்பாக லக்ஷயா சென் கூறியது:

லீ ஷிஃபெங் அபாரமாக ஆடினாா். நீண்ட ரேலிகளால் இருவரும் களைத்து போனோம். ஆனால் நிலையை உணா்ந்து ஆடி வெற்றி பெற்றேன்.

அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி தருகிறது. பயிற்சியாளரும் உரிய நேரத்தில் அறிவுரை கூறியது பயனாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.