மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து: வியட்னாமுடன் மோதுகிறது இந்தியா

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து (ஏஎஃப்சி) சாம்பியன் போட்டியில் புதன்கிழமை முதல் ஆட்டத்தில் வியட்னாமுடன் மோதுகிறது இந்தியா.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:35 pm

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து (ஏஎஃப்சி) சாம்பியன் போட்டியில் புதன்கிழமை முதல் ஆட்டத்தில் வியட்னாமுடன் மோதுகிறது இந்தியா.

ஆஸ்திரேலியாவில் ஏஎஃப்சி மகளிா் ஆசியக் கோப்பை 2026 போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2022 போட்டியில் இந்திய அணி வெளியேறிய நிலையில், நான்காண்டுகள் கழித்து கனவு நிறைவேறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குவாலிஃபயா் ஆட்டங்களில் இந்திய மகளிா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

தலைமை பயிற்சியாளராக அமெலியா வல்வோ்ட் நியமிக்கப்பட்ட நிலையில் அணியின் செயல்பாடு ஏற்றம் கண்டுள்ளது.

பயிற்சியாளா் அமெலியா, கேப்டன் ஸ்வீட்டி தேவி கூறியது:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்வுகளை கருத்தில் கொள்ளக் கூடாது. மீண்டும் தகுதி பெற்றுள்ளோம். நமது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டம் இதுவாகும். நன்றாக தயாராகி உள்ளோம். எந்த ஆட்டத்தையும் எளிதாக கருத மாட்டோம் என்றனா்.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் பிரேசிலில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2027-இல் பங்கேற்க தகுதி பெறுவா்.

காலிறுதியில் தோற்கும் 4 அணிகள், குவாலிஃபயா் மூலம் நேரடி தகுதி பெறுவதற்கான ஆட்டத்திலும், பிளே ஆஃப் சுற்றிலும் ஆடுவா்.

தரவரிசையில் 67ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி பல்வேறு நாடுகளில் 52 நாள்கள் பயிற்சி மேற்கொண்டது.