ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நியூசிலாந்தை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்!

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பெல்ஜியம் அணி குறித்து...

Belgium's Kevin De Bruyne (7) and Belgium's Youri Tielemans (8) winning the the World Cup Group G soccer match between New Zealand and Belgium in Vancouver, British Columbia, Friday, June 26, 2026. (AP Photo/Sydney Shankman)

கோல் அடித்த மகிழ்ச்சியில் பெல்ஜியம் வீரர்கள். - படம்: ஏபி

Published On :27 ஜூன் 2026, 4:17 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் நியூசிலாந்தை 5-1 என வீழ்த்தி பெல்ஜியம் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

குரூப் ஜி பிரிவில் 5 புள்ளிகளைப் பெற்ற பெஜியம் அந்த குரூப்பில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணியினர் 28, 50, 66, 86, 90+4ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள். நியூசிலாந்து சார்பில் ஆறுதல் அளிக்கும் வகையில் 84ஆவது நிமிஷத்தில் எலீஜா ஜஸ்ட் கோல் அடித்தார்.

இந்தப் போட்டியில், 35 முறை ஷாட்டுகளை அடித்த பெல்ஜியம் 10 முறை இலக்கை நோக்கி அடித்தார்கள். இதில், 5 கோல்கள் தடுக்கப்பட்டன.

பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் கெவின் டி பிரைன் இந்தப் போட்டியில் கோல் அடித்தார். கடந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் குரூப் ஸ்டேஜ் உடன் வெளியேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் டிரா ஒரு தோல்வியுடன் உலகக் கோப்பையில் இருந்து வெற்றியே பெறாமல் வெளியேறியது.

Summary

Trossard, De Bruyne score and Belgium defeat New Zealand 5-1 to advance at the World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.