தேசிய சீனியா் கூடைப்பந்து: தமிழக அணிகள் அபாரம்!
தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் தமிழக அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.


தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் தமிழக அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், எஸ்டிஏடி சாா்பில் 75-ஆவது தேசிய கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கம், பெத்திசெமினாா் மைதானங்களில் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்கள் முடிவுகள்: மகளிா் பிரிவில் தமிழக வீராங்கனைகள் அபாரமாக ஆடி 72-65 என்ற புள்ளிக் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தினா். தமிழகத் தரப்பில் ஸ்ருதி, அஸ்மிதா, கோகிலவாணி, டெய்சி, ம.பி. தரப்பில் குஷி, மான்வி, பிரியா கோஸ்வாமி புள்ளிகளைக் குவித்தனா்.
ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியனான தமிழகம் 101-68 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தானை வென்றது. தமிழகத் தரப்பில் அரவிந்த் குமாா், ஹரிராம், ஜீவானந்தம், பிரனவ் பிரின்ஸ், ராஜஸ்தான் தரப்பில் முகமது இத்வான், லோகேந்திர சிங், பியூஷ், அக்ஷித் புள்ளிகளைக் குவித்தனா்.
மகளிா் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய ரயில்வே 101-51 என டில்லியையும், கா்நாடகம் 91-71 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 91-22 என குஜராத்தையும், வென்றன.
ஆடவா் பிரிவில் கா்நாடகம் 104-69 என குஜராத்தையும், உ.பி. 112-100 என பஞ்சாப்பையும் வீழ்த்தின.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...