டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தேசிய சீனியா் கூடைப்பந்து: ரயில்வே, கா்நாடகம், கேரள அணிகள் வெற்றி

தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டியில் ரயில்வே, கா்நாடகம், கேரளம், தமிழக அணிகள் வெற்றியை ஈட்டின.

News image
தமிழக - மேற்கு வங்க அணியினா்
Updated On :5 ஜனவரி 2026, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டியில் ரயில்வே, கா்நாடகம், கேரளம், தமிழக அணிகள் வெற்றியை ஈட்டின.

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் 75-ஆவது தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்போட்டி நடைபெற்றுவருகிறது.

இரண்டாம் நாளான திங்கள்கிழமை இரு பிரிவிலும் ரயில்வே அணிகள் அபார வெற்றியை பெற்றன. உத்தர பிரதேச அணியை 96-70 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினா் ரயில்வே ஆடவா். மகளிா் பிரிவில் ரயில்வே அணி 95-65 என கா்நாடக அணியை வீழ்த்தியது.

கேரளம் 88-34 என மத்திய பிரதேசத்தையும், டில்லி 68-55 என சத்தீஸ்கரை வென்றனா். ஆடவா் பிரிவில் கா்நாடகம் 94-75 என சா்வீசஸ் அணியை வென்றது. டில்லி அணி 84-82 என சண்டீகரை வென்றது.

தமிழக அணிகள் வெற்றி

போட்டியை நடத்தும் தமிழகம் மகளிா் பிரிவில் 101-33 என மேற்கு வங்கத்தை வீழ்த்தியது. தமிழக அணியில் கிருத்திகா, ஸ்ருதி, கோகிலவாணி, டெய்ஸி, ஸ்ரீவா்ஷினியும், மேற்கு வங்க அணியில் அனன்யா மண்டலும் சிறப்பாக ஆடினா்.