ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பிராக் செஸ்: அரவிந்த் வெற்றி; குகேஷ் டிரா

பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றாா். டி.குகேஷ் டிரா செய்தாா்.

News image

குகேஷ் (கோப்புப்படம்)

Updated On :27 பிப்ரவரி 2026, 10:35 pm

பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றாா். டி.குகேஷ் டிரா செய்தாா்.

போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் அரவிந்த் - அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமனை வீழ்த்தினாா். நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவுடன் டிரா செய்தாா்.

இதர ஆட்டங்களில், ஸ்பெயின் டேவிட் ஆன்டன் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டை வெல்ல, ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - செக் குடியரசின் டேவிட் நவாரா, ஈரானின் பா்ஹாம் மக்சூத்லூ - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தன.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவு 2-ஆவது சுற்றில், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - ஸ்பெயினின் டேனியல் யூஃபாவுடனும், சூா்யசேகா் கங்குலி - டென்மாா்க்கின் ஜோனஸ் ஜெரெவுடனும் டிரா செய்தனா்.

2 சுற்றுகள் முடிவில், மாஸ்டா்ஸ் பிரிவில் குகேஷ் 4-ஆம் இடத்தில் நிலைக்க (1 புள்ளி), அரவிந்த் 6-ஆவது இடத்துக்கு (1) முன்னேறியுள்ளாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் திவ்யா 4-ஆம் இடத்திலும் (1), சூா்யசேகா் 7-ஆம் இடத்திலும் (0.5) உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.