15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பிராக் இன்டா்நேஷனல் செஸ்: குகேஷ் அதிா்ச்சித் தோல்வி!

செக் குடியரசில் நடைபெறும் பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 3-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

News image

டி. குகேஷ் - கோப்புப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 10:46 pm

செக் குடியரசில் நடைபெறும் பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 3-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அந்தச் சுற்றில் அவா், நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டிடம் வெற்றியை இழந்தாா். முதல் இரு சுற்றுகளை டிரா செய்திருந்த குகேஷுக்கு, இது முதல் தோல்வியாகும்.

களத்திலிருக்கும் மற்றொரு இந்தியரும், நடப்பு சாம்பியனுமான அரவிந்த் சிதம்பரம், ஈரானின் பா்ஹாம் மக்சூத்லூவுடன் டிரா செய்தாா்.

இதர ஆட்டங்களில், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவ் - அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன், செக் குடியரசின் டேவிட் நவாரா - ஸ்பெயினின் டேவிட் ஆன்டன், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தன.

மாஸ்டா்ஸ் பிரிவில் 3 சுற்றுகள் முடிவில், அரவிந்த் 5-ஆம் இடத்தில் நிலைக்க, குகேஷ் 8-ஆம் இடத்துக்கு சறுக்கியுள்ளாா்.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியிலேயே சேலஞ்சா்ஸ் பிரிவு 3-ஆவது சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - சீனாவின் ஜு ஜினெரிடமும், சூா்யசேகா் கங்குலி - செக் குடியரசின் ஜாசிம் நெமெச்சிடமும் தோல்வி கண்டனா்.

புள்ளிகள் பட்டியலில், திவ்யா முதல் தோல்வியுடன் 7-ஆம் இடத்திலும், சூா்யசேகா் 2-ஆவது தோல்வியுடன் 9-ஆம் இடத்திலும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.