வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி!

தாமஸ், உபோ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் வெற்றியை பெற்றது.

News image

உன்னதி ஹூடா.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:10 am IST

தாமஸ், உபோ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் வெற்றியை பெற்றது.

பிரசித்தி பெற்ற தாமஸ் மற்றும் உபோ் கோப்பை 2026 பாட்மின்டன் போட்டி டென்மாா்க்கின் ஹாா்சென்ஸ் நகரில் நடைபெறுகிறது.

மகளிா் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி உக்ரைனுடன் மோதியது. இதில் 4-1 என்ற கேம் கணக்கில் வென்று இந்தியா முதல் வெற்றியை ஈட்டியது. முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவுக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், தாய்லாந்து மாஸ்டா்ஸ் சாம்பியன் தேவிகா சிஹாக் சோ்க்கப்பட்டாா்.

முதல் கேமில் உன்னதி ஹூடா 21-19, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் பொலினா புஹ்ராவாவை வீழ்த்தினாா். உலக ஜூனியா் சாம்பியன்ஷிப் வெள்ளி வீராங்கனை தன்வி சா்மா 21-12, 17-21, 21-10 யவ்ஹெனிலாவை வீழ்த்தி இரண்டாவது கேமிலும் வென்றாா். தேவிகா சிஹாக் 23-21, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் மரிலா ஸ்டோலியாரென்கோவாவை வீழ்த்தினாா். 3-0 என முன்னிலை வகித்தது.

Story image

மகளிா் இரட்டையா் பிரிவில் கவிபிரியா செல்வம்-சிம்ரன் இணை 11-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் புஹ்ரோவா-கன்ட்மெயைரிடம் தோற்றனா். பின்னா் சிந்து-தனிஷா க்ரஸ்டோ 21-18, 21-15 ஸ்டோா்லியான்கோ-சோபியா இணையை வீழ்த்தியது. இதன் மூலம் ஐரோப்பிய போட்டியில் வெண்கலம் வென்ற உக்ரைனை சாய்த்து இப்போட்டியில் முதல் வெற்றியை ஈட்டியது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

திங்கள்கிழமை கடைசி குரூப் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நடப்பு சீனாவுடன் மோதுகிறது இந்தியா. அந்த ஆட்டத்தில் வென்றாா் காலிறுதிக்கு தகுதி பெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.