தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறிய ஆர்சி லென்ஸ்..! கால்பந்து திடலில் குவிந்த ரசிகர்கள்!

பிரான்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற ஆர்சி லென்ஸ் அணி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் ஆர்சி லென்ஸ் அணியினர், ரசிகர்கள். - படங்கள்: எக்ஸ் / ஆர்சி லென்ஸ், ஏபி.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:04 am

பிரான்ஸில் நடைபெறும் பிரான்ஸ் கோப்பை (பிரெஞ்சு கோப்பை) அரையிறுதியில் ஆர்சி லென்ஸ் அணி 4 -1 என துலூஸ் அணியை வீழ்த்தியது.

மூன்று முறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற ஆர்சி அணி முதல்முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

ரேசிங் கிளப் டி லென்ஸ் எனப்படும் ஆர்சி லென்ஸ் அணி இன்னும் ஒரு பிரான்ஸ் கோப்பையைக் கூட வெல்லாமல் இருக்கிறது. முன்னதாக, 1947-48, 1974-75, 1997-98 சீசனில் இறுதிப் போட்டியில் ஆர்சி லென்ஸ் அணி தோல்வியுற்றது.

அரையிறுதியில் ஆர்சி லென்ஸ் அணி சார்பில் 9,18, 35, 74ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்கள். துலூஸ் அணி சார்பில் 21ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடிக்கப்பட்டது.

ஆதிக்கத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்சி லென்ஸ் அணி இறுதிப் போட்டியில் ஸ்ட்ராஸ்பர்க் அல்லது நைஸ் ஆகிய அணிகளில் எதாவது ஒன்றுடன் மோதவிருக்கிறது.

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இந்த அணியின் ரசிகர்கள் திடலுக்குள் குவிந்தார்கள். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary

Lens reaches French Cup final as Thauvin shines in 4-1 win over Toulouse.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.