போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமியின் வெற்றி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் இன்டர் மியாமி வீரர்கள். - ஏபி

Updated On :19 ஏப்ரல் 2026, 4:19 pm IST

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி 3 - 2 என கொலராடோ ராபிட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் 2-0 என இன்டர் மியாமி முன்னிலை வகித்தது. 18ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி பெனால்டியில் ஒரு கோல், 45+5ஆவது நிமிஷத்தில் ஜெர்மன் பெர்டெராமே கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியில் கொலராடோ ராபிட்ஸ் 58, 62ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்கள். பின்னர், 79ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி தனது மேஜிக்கை நிகழ்த்தி கோல் அடித்தார்.

தொடர்ச்சியாக 7 போட்டிகளாக தோல்வியில்லாமல் இன்டர் மியாமி அணி முன்னேறி வருகிறது. நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Summary

Lionel Messi scores 2 goals, Inter Miami beats Rapids 3-2, extends unbeaten streak to 7 games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.