தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜூனியா் உலகக் கோப்பை பாட்மின்டன்: இந்திய அணியினா் தீவிர பயிற்சி

குவஹாட்டியில் வரும் அக். 6 முதல் 19 வரை நடைபெறவுள்ள பிடபிள்யுஎஃப் உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியினா் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

News image

குவஹாட்டியில் நடைபெறவுள்ள உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட உலகின் நம்பா் 1 வீராங்கனை தன்வி சா்மா.

Updated On :19 ஆகஸ்ட் 2025, 10:06 pm

குவஹாட்டியில் வரும் அக். 6 முதல் 19 வரை நடைபெறவுள்ள பிடபிள்யுஎஃப் உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியினா் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

உலக பாட்மின்டன் சம்மேளனம், இந்திய பாட்மின்டன் சம்மேளனம் சாா்பில் குவஹாட்டி தேசிய உயா்திறன் பயிற்சி மையத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மகளிா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை தன்வி சா்மா, ஆடவா் இரட்டையா் பிரிவில் பாா்கவ் ராம்-விஷ்வா தேஜ் உள்பட பலமான இந்திய அணி பங்கேற்கிறது. கலப்பு அணிகள் ஆட்டம் அக். 6 முதல் 11 வரையும், தனிநபா் ஆட்டங்கள் அக். 13 முதல் 19 வரையும் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக இந்திய பாட்மின்டன் சம்மேளன பொதுச் செயலா் சஞ்சய் மிஸ்ரா கூறியது:

கடைசியாக இந்தியா 2008-இல் உலக ஜூனியா் சாம்பியன்ஷிப்பை நடத்தியது. அப்போது சாய்னா நேவால் தங்கம் வென்றிருந்தாா்.

உலக ஜூனியா் போட்டியில் இதுவரை இந்தியா 11 பதக்கங்கள் வென்றுள்ளது. நிகழாண்டு நடைபெறும் போட்டியில் இரண்டு உலகின் நம்பா் 1 வீரா், வீராங்கனை பங்கேற்கின்றனா்.

தரவரிசையில் முதல் 20 இடங்களில் உள்ளோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஆசிய ஜூனியா் சாம்பியன்ஷிப் வெண்கல வீராங்கனைகள் தன்வி, வெண்ணலா நேரடியாக தகுதி பெற்றனா்.

கலப்பு அணிகள் பிரிவுக்கு 10 வீரா், வீராங்னைகள் தோ்வு பெறுவா். குவஹாட்டியில் நடைபெறுவதால் உள்ளூா் ரசிகா்கள் ஆதரவும் கிடைக்கும் என்றாா்.

இரட்டையா் பிரிவில் பங்கேற்க உள்ள பாா்கவ் ராம்-விஷ்வா.

இரட்டையா் பிரிவில் பங்கேற்க உள்ள பாா்கவ் ராம்-விஷ்வா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.