சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்; முன்னாள் வீரர் நம்பிக்கை!

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
பாகிஸ்தான் அணி வீரர்கள்- படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் (எக்ஸ்)
Updated On :26 மே 2024, 3:09 pm

DIN

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் எனவும், மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஷகித் அஃப்ரிடி (கோப்புப்படம்)

ஷகித் அஃப்ரிடி (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், வீரர்களின் மிடில் ஆர்டர் ஸ்டிரைக் ரேட் கவலைக்குரியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக, 7-13 ஓவர்களில் வீரர்களின் ஸ்டிரைக் ரேட் கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஆனால், வீரர்கள் தங்களது ஸ்டிரைக் ரேட்டில் முன்னேற்றம் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன். பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் போட்டி நடைபெறுவதே அதற்கு காரணம். அங்குள்ள ஆடுகளங்களின் தன்மை பாகிஸ்தான் அணிக்கு ஏற்றவாறு இருக்கும். மற்ற அணியில் உள்ள பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் பாகிஸ்தானிடம் வலுவான பந்துவீச்சு உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.