சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அமெரிக்காவுக்கு 5 ரன்கள் ‘பெனால்டி’ விதிக்கப்பட்டது ஏன்?

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக ’ஸ்டாப் கிளாக்’ விதிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

News image
படம்: ஐசிசி/ வலைதளம்
Updated On :13 ஜூன் 2024, 6:48 am

DIN

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ‘ஸ்டாப் கிளாக்’ விதிப்படி அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்பட்டது.

‘ஸ்டாப் கிளாக்’ என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகம் செய்த பிறகு முதல்முறையாக அமெரிக்காவுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா - அமெரிக்கா நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்க அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 19-வது ஓவரில் இலக்கை சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 3 முறை ஓவர்களை போடுவதற்கு அமெரிக்கா அணி தாமதம் செய்ததால் ‘ஸ்டாப் கிளாக்’ விதிப்படி எதிரணியான இந்தியாவுக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.

16-வது ஓவரின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படுவதாக நடுவர் அறிவித்தார்.

‘ஸ்டாப் கிளாக்’ விதிமுறை என்றால் என்ன?

ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிக்குள் போட வேண்டும். அவ்வாறு பந்துவீச தவறும் பட்சத்தில் இரு முறை எச்சரிக்கை வழங்கப்படும். மூன்றாவது முறையும் இதே தவறை செய்தால் எதிரணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படும்.

பந்துவீசுவதற்கான நேரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் சோதனை முறையில் இந்த புதிய விதியை ஐசிசி கொண்டு வந்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில், ‘ஸ்டாப் கிளாக்’ விதிமுறையை முழுமையாக ஐசிசி அமல்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.