மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் பாபர் அசாம், அடுத்தடுத்த 3 இடங்களில் இந்திய வீரர்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி தரவரிசையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

News image

பாபர் அசாம், ரோஹித் சர்மா.

Updated On :14 ஆகஸ்ட் 2024, 12:08 pm

ஐசிசி தரவரிசை வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை வீரரும் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 0-2 என தொல்வியை தழுவியது. இது வரலாற்று தோல்வியாகவும் அமைந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடினாலும் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் சிறப்பாக விளையாடினார். 157 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தரவரிசையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

2,3,4ஆம் இடங்களில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி என வரிசையாக இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் 101 ரன்கள் எடுத்து பதும் நிசாங்கா 8ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாபர் அசாம் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

ஷுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி ரோஹித் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.

இலங்கை வீரர் துனித் வெல்லாலகே 17 இடங்கள் முன்னேறியுள்ளார். நெதர்லாந்து வீரர் 10 இடங்கள் முன்னேறி 49ஆம் இடம் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.