மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பழிதீர்க்க காத்திருக்கும் ஆஸி., இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறும்: ரவி சாஸ்திரி நம்பிக்கை!

இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமென ரவி சாஸ்திரி உறுதியாகக் கூறியுள்ளார்.

News image

ரவி சாஸ்திரி - கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:52 am

இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பியது. இந்த நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி.

பார்டர் கவாஸ்கர் டிராபி எனப்படுவது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியினை குறிக்கும். இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமென முன்னாள் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது:

பும்ரா, ஷமி உடல்நிலை நன்றாக இருக்கிறது, சிராஜும் இருக்கிறார். இவர்களுடன் அஸ்வின், ஜடேஜா மாதிரியான் ஆள்களும் இருக்கிறார்கள். இந்திய அணியில் வலுவான வீரர்கள் இருக்கிறார்கள.

இந்தியாவுடன் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங் மட்டும் நன்றாக செய்தால்போதுமானது மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம்.

கடைசி 5-8 வருடங்களில் இந்த இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன என்பது தெரியும். அதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா பழிதீர்க்க காத்திருக்கும். இரண்டுமுறை தோல்வியுற்றதால் ஆஸி. அணி மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள்.

ஆஸி.யின் வேகப் பந்து வீச்சாளர்களை இந்தியா எப்படி சமாளிக்குமென்பது முக்கியமான காரணியாக இருக்கும். தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், சுழல்பந்து வீச்சாளர்கள் அங்கு இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவின் பந்துவீச்சுக்கும் எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்றார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸி. ஆதிக்கம் செலுத்தியிருந்தது. டி20யில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

சமீபத்தில் ரிக்கி பாண்டிங் ஆஸி. அணி 3-1 என வெற்றி பெறுமென கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.