இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பியது. இந்த நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி.
பார்டர் கவாஸ்கர் டிராபி எனப்படுவது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியினை குறிக்கும். இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமென முன்னாள் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது:
பும்ரா, ஷமி உடல்நிலை நன்றாக இருக்கிறது, சிராஜும் இருக்கிறார். இவர்களுடன் அஸ்வின், ஜடேஜா மாதிரியான் ஆள்களும் இருக்கிறார்கள். இந்திய அணியில் வலுவான வீரர்கள் இருக்கிறார்கள.
இந்தியாவுடன் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங் மட்டும் நன்றாக செய்தால்போதுமானது மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம்.
கடைசி 5-8 வருடங்களில் இந்த இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன என்பது தெரியும். அதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா பழிதீர்க்க காத்திருக்கும். இரண்டுமுறை தோல்வியுற்றதால் ஆஸி. அணி மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள்.
ஆஸி.யின் வேகப் பந்து வீச்சாளர்களை இந்தியா எப்படி சமாளிக்குமென்பது முக்கியமான காரணியாக இருக்கும். தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், சுழல்பந்து வீச்சாளர்கள் அங்கு இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவின் பந்துவீச்சுக்கும் எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்றார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸி. ஆதிக்கம் செலுத்தியிருந்தது. டி20யில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
சமீபத்தில் ரிக்கி பாண்டிங் ஆஸி. அணி 3-1 என வெற்றி பெறுமென கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம் - தொகுதி அலசல்: ஹாட்ரிக் வெற்றி தொடருமா?
டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

மகளிா் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



