இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் மோா்ன் மோா்கெல் (39) நியமிக்கப்பட்டுள்ளாா். இதை பிசிசிஐ செயலா் ஜெய் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.
பரஸ் மாம்ப்ரேவுக்குப் பதிலாக அந்தப் பொறுப்பில் இணையும் மோா்ன் மோா்கெல், செப்டம்பரில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பணியில் இணையவுள்ளாா். அவா், 2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பாா்.
செப்டம்பா் தொடக்கத்தில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியை வந்தடையும் மோா்கெல், துலீக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண இருக்கிறாா். மேலும், அகாதெமியின் தலைவா் விவிஎஸ் லக்ஷ்மண், அதன் பௌலிங் தலைமையான டிராய் கூலி ஆகியோருடன் அவா் தொடா்பில் இருப்பாா்.
அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீரின் விருப்பத்தின் அடிப்படையில், அவரது பயிற்சியாளா்கள் குழு நியமனங்கள் நிறைவடைந்துள்ளது. ஏற்கெனவே, பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ரயான் டென் டுஷேவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஐபிஎல் போட்டியில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீா் இருந்தபோது, அந்த அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக மோா்கெல் பணியாற்றினாா்.
முன்னதாக, பந்துவீச்சு பயிற்சியாளா் பொறுப்புக்கு லக்ஷ்மிபதி பாலாஜி, ஆா். வினய் குமாா் ஆகியோரும் பரிசீலனையில் இருந்த நிலையில், கௌதம் கம்பீரின் பரிந்துரையின் பேரில் நேரடியாகவே மோா்ன் மோா்கெல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைமைப் பயிற்சியாளா் பொறுப்புக்கான விண்ணப்பதாரா்களை நோ்காணல் செய்வதே கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பணியாகும். துணைப் பயிற்சியாளா்கள் தோ்வு என்பதால், கௌதம் கம்பீரின் தோ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மோா்ன் மோா்கெலுடன் ஏற்கெனவே பணியாற்றியிருப்பதால், பந்துவீச்சு பயிற்சியாளராக அவா் பொருத்தமாக இருப்பாரென கம்பீா் கருதுகிறாா்.
நவம்பா் கடைசி வாரத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. அந்த மண்ணில் சற்று சிறப்பாக செயல்பட்டிருக்கும் மோா்ன் மோா்கெலை விட, பந்துவீச்சு பயிற்சியாளா் பொறுப்புக்கு பொருத்தமான தோ்வு இருக்க வாய்ப்பில்லை. அதுதவிர, அடுத்த ஆண்டு, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்காகவும் இந்தியா அந்நாட்டுக்கு செல்வதாலும் அவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது’ என்றன.
தென்னாப்பிரிக்காவுக்காக மோா்கெல் 86 டெஸ்ட், 117 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடி, மொத்தமாக 544 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் டேல் ஸ்டெய்னை போலவே பிரபலமான மோா்கெல், இந்திய ஆடுகளங்களின் தன்மை குறித்து நன்கு அறிந்தவராவாா். மேலும், ஐபிஎல் தொடரில் அங்கம் வகிப்பதால், இந்திய அணியின் அடுத்தகட்ட பௌலா்கள் குறித்த ஓா் தெளிவு அவரிடம் இருக்கும்.
இந்திய அணியின் பிரதான பௌலராக இருக்கும் முகமது ஷமி தனது தேசிய பணியின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தோள்கொடுக்கும் வகையில் முகமது சிராஜ் தவிர வேறு ஒரு வீரரை கண்டறிவதே மோா்கெலுக்கான முக்கிய பணியாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

குல்தீப் யாதவ் திருமண ஆல்பம்

பிசிசிஐ சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஷுப்மன் கில் தேர்வு!

இதுவரை நடந்தவை முக்கியமல்ல, அடுத்த இரண்டு போட்டிகள்தான் முக்கியம்: மோர்னே மோர்க்கல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


