சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு முக்கியமான வீரர்கள் இடம்பெற வேண்டும் என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

News image
சௌரவ் கங்குலி - படம் | ஐபிஎல்
Updated On :26 ஏப்ரல் 2024, 2:38 pm

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு முக்கியமான வீரர்கள் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ இந்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட வேண்டும். உலகக் கோப்பை டி20 தொடரில் 8-வது இடத்தில் களமிறங்கி அணிக்காக 15-20 ரன்கள் சேர்க்கும் திறன் கொண்ட ஒருவர் அணிக்கு தேவைப்படும் என ரோஹித் சர்மா நினைப்பார். அந்த வேலையை அக்‌ஷர் படேல் எளிதில் செய்து முடிக்கக் கூடியவர். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிக்ஸருக்கு விளாச அக்‌ஷர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவால் முடியும். அவர்கள் இருவரும் மிகவும் திறமைசாலிகள்.

எனக்கு ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் மிகவும் பிடிக்கும். ரிஷப் பந்த் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பார். சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பிடிக்கலாம். அவர் அணியில் இடம்பெறக் கூடாது என நான் கூறவில்லை. மற்ற வீரர்களைப் போல அவரும் மிகச் சிறந்த வீரர். அவர் கீப்பிங் செய்கிறார், பேட்டிங் செய்கிறார், ராஜஸ்தான் ராயல்ஸை கேப்டனாக வழிநடத்துகிறார். இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர்கள் நினைத்தால் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருமே அணியில் இடம்பிடிக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.