2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:12 pm

DIN

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

ஆசியக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டி மழையினால் பாதிக்கப்பட  வாய்ப்புள்ளதாக தெரிகிறது. லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழை காரணத்தால் முடிவு கிடைக்காமல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதே மாதிரியான சூழல் தற்போது இரு அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்றிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பான அறிக்கையில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருப்பதாவது: நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நிறுத்தப்பட்டால், நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அடுத்த நாள் (செப்டம்பர் 11) போட்டி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நடைபெறும் மற்ற சூப்பர் 4 போட்டிகள் எதற்கும் கூடுதல் நாள் என்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.