உலகக் கோப்பையின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியின்போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 4-வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.