கடந்த டிசம்பர் 30 அன்று உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா். உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது.
கடந்த மாதம், முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். அவருடனான ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் நேர்காணல் எடுத்தது.அதில் இப்போது எப்படி இருக்கிறது, தினமும் என்ன செய்கிறீர்கள், கிரிக்கெட்டை எவ்வளவு மிஸ் செய்கிறீர்கள், உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் போன்ற கேள்விகளை கேட்டதற்கு ரிஷப் பந்த் கூறியதாவது:
முன்பை விடவும் தற்போது நன்றாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து அட்டவணையின்படி பிசியோதெரபிஸ்ட் சொல்வதுபடி உடற்பயிற்சி பின்பு ஓய்வு பின்பு 2வது செஷன், 3வது செஷன் என இடைவிடாமால் செய்கிறேன். அடிக்கடி பழங்கள், நீராகாரம் எடுத்துக் கொள்கிறேன். நான் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன் என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த நேரத்தில்தான் நான் வாழ்க்கையில் ஒன்று கற்றுக் கொண்டேன். காலையில் எழுந்து பல் துலக்கும்போது கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் இதையெல்லாம் சாதாரணம் என கடந்து சென்றுவிடுகிறோம். உண்மையில் இது பொக்கிஷம் என்பதை விபத்திற்குப் பிறகே உனர்கிறேன்.
கிரிக்கெட்டை மிகவும் மிஸ் செய்கிறேன். விரைவில் நலமடைந்து விளையாட காத்திருக்கிறேன். எனது ரசிகர்களுக்கு இந்திய அணிக்கும், ஐபிஎல்லில் தில்லி அணிக்கும் உங்களது ஆதரவினை தெரிவியுங்கள். உங்களது அன்பினால் நான் விரைவில் நலமடைவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


